முடியும் என்பது மூலதனம்!முடியாது என்பது மூடத்தனம்.!

Saturday, 27 August 2011

கவுண்டர் என்ற சொல் தற்போது சாதி அடையாளப்படுத்தும் சொல் அல்ல

கவுண்டர் என்ற சொல் தற்போது சாதி அடையாளம் கொண்டு அறியப்பட்டாலும் அது எந்த சாதியையும் அடையாளப்படுத்தும் சொல் அல்ல. ஊர் பெரிய மனிதரை கவுண்டர் என்று அழைத்தனர். ஊரில் நிறைய பெரிய மனிதர்கள் இருந்தாலும் ஒருவரையே கவுண்டர் என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அவரை ஊர் கவுண்டர் என்று அழைத்தனர். கொங்கு நாட்டுப் பகுதியில் ஊர் கவுண்டரை கொத்துக்காரர் என்றும் அழைப்பர். ஊரை உருவாக்கிய மரபைச்சேந்தவர்களையே இவ்வாறு சகல முதல் மரியாதைகளையும் கொடுத்து அழைக்கின்றனர். இது பெரும்பாலும் கொங்கு வெள்ளாள (கொங்கு வேளாளர்) கவுண்டர்களுக்கே உள்ளது. சங்க மன்னர்களான கொங்கர் (கங்கர்)களது நிருவாக முறையான கமுண்ட (காமிண்ட) முறை. கவுண்டர் என்ற சொல் காமிண்டன் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. காமிண்டன் என்றால் நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்று பொருள்.
கவுண்டர் என்ற அடையாளத்தை பயன்படுத்தும் சாதிகளின் பட்டியல்:

  கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்:

1.    வெள்ளாள கவுண்டர்
2.    நாட்டுக் கவுண்டர்
3.    செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
4.    குறும்பக் கவுண்டர்
5.    பாலவெள்ளாளக் கவுண்டர்
6.    திருமுடி வெள்ளாள கவுண்டர்
7.    படைதலைக் கவுண்டர்
8.    நரம்புகட்டிக் கவுண்டர்.
9.    தொண்டு வெள்ளாளக் கவுண்டர்
10.    சங்கு வெள்ளாளக் கவுண்டர்
11.    பவளங்கட்டி வெள்ளாளக் கவுண்டர்
12.    அனுப்ப வெள்ளாள க்கவுண்டர்
13.    இரத்தனகிரிக் கவுண்டர்
14.    பூசாரிக் கவுண்டர்
15.    ஊராளிக் கவுண்டர்
16.    பாலக்கவுண்டர்
17.    வெள்ளிக்கைக் கவுண்டர்
18.    ஆற்றங்கரைக் கவுண்டர்
19.    மலையடிக் கவுண்டர்
20.    முடிவாண்டிக் கவுண்டர்
21.    தொள்ளக்காது கவுண்டர்
22.    இளங்கன்னக் கவுண்டர்
23.    மலையாளக் கவுண்டர்
24.    மன்னாடிக் கவுண்டர்
25.    மொட்டைக் கவுண்டர்
26.    வீரகோடி வெள்ளாளக் கவுண்டர்
27.    முதலியார் கவுண்டர்
28.    செட்டியார் கவுண்டர்
29.    கல்வேலி கவுண்டர்
30.    காவாலிக் கவுண்டர்
31.    முன்றூர் கவுண்டர்
32.    காரைக்காட்டு வேளாளக் கவுண்டர்

  பிற கவுண்டர்கள்

1.    வேட்டுவ கவுண்டர்
2.    ஊராளி கவுண்டர்

  கொங்கு நாட்டின் பூர்வ குடிகளல்லாத கவுண்டர்கள்:

1.    வன்னிய கவுண்டர் (சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் தவிர )
2.    ஒக்கலிக் கவுண்டர்
3.    கப்பிலியர்

3 comments:

  1. தொ(ல்லை)(லைத்த) இளமை...

    எண்ணங்கள் இரவில் கூட தூங்க விடுவது இல்லை,

    பார்க்கும் எடமெல்லாம் என்னவள் வந்து விடுவாள் ,

    என்று கனவு லோகத்தில் கலவரம் அடைகிறது மனம்,

    இவளா, அவளா என்று தெரியதா என் மனம்,

    அட்சய, மத்திய ரேகையில் ஓடுகிறது.

    என்னுடன் படித்தவர்கள் எல்லாம் பாதி கிழவனாகி

    போனார்கள்,

    ஓரு சில நேரத்தில், என் மனம் ஏன் இவ்வளவு பதற்றம்?????????????

    "தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."
    என்றென்றும் அன்புடன்,
    - மகேஸ்..

    ReplyDelete
  2. உங்களுடைய அலைபேசி எண் கொடுங்கள்... சாதி பற்றி பேசனும்

    ReplyDelete
  3. உங்களுடைய அலைபேசி எண் கொடுங்கள்... சாதி பற்றி பேசனும்

    ReplyDelete